LIC....62......1.9.2018
பொதுத்துறை நிறுவனமாகி
இன்றும்
புதுத்துறை நிறுவனமாகத்
திகழும் LICக்கு
வயது அல்ல 62
அனுபவம் 62.
இந்தியா வளர
இந்தியர் வளர
இணையில்லா சேவை!
இன்றும், என்றும்
இளமையுடன்
இருக்கும் LIC.
தன் நன்மைக்காக அல்ல,
தன்னை நம்பும் மக்களின்
நன்மைக்காக
இயங்குவது LIC.!
மக்களுக்காக
சிந்திக்கும் நிறுவனம்!
மக்களை
சந்திக்கும் நிறுவனம்!
திட்டங்கள் பல தீட்டி
திட்டமிட்டு செயல் படும் LIC.
ஐந்தாண்டு திட்டத்திற்கு
அள்ளிக் கொடுக்கும் LIC.
60 வயதானால் ஓய்வு
தனி நபருக்கு!
62 வயதானாலும்
ஓய்வில்லா சூரியனே LIC.
காப்பீட்டுத்துறையை
தனியாருக்கு திறந்துவிட்டு
ஆண்டுகள் பல ஆயிற்று!
பயமுறுத்தினர் பலர்!
இளமையான பலர் வருவர்,
என்ன ஆகுமோ!
என்றனர் சிலர்!
இன்றோ
முன்வரிசையில் LIC.
முகவரி இல்லாமல்
இருப்பவர் பலர்!
வயதானால் ஓட முடியுமா?
என்றவர்கள் இன்று
துரத்தமுடியாமல்
தூரத்தில் உள்ளனர்!
வயதல்ல!
அனுபவம்!
ஜொலிக்கும் வைரம்!
இந்தியா முழுவதும்
வடக்கு, தெற்கு,
கிழக்கு, மேற்கு எல்லா
திசைகளிலும்
எழுந்து நிற்பது LIC.
சென்றாலே சந்திக்க முடியும்
என்ற நிலையில் பல
நிறுவனங்கள்.... ஆனால்
மக்களை சென்று சந்திக்கும்
நிறுவனம் LIC.
LIC
நிதி நிறுவனம்
மட்டுமல்ல,
நீதி நிறுவனம் கூட!
ஆம்,
சமூக அக்கறை உள்ள
நிறுவனம்கூட!
அடிக்கல் வெளியே தெரியாது
அடிக்கல்லாக இருந்து
அன்று உழைத்து ஓய்வுபெற்றவர்கள்,
அடிக்கல்மீது அரண்மனை
எழுப்பி இன்றும்
உழைப்பவர்கள்,
மக்களுக்கும் நிறுவனத்திற்கும்
பாலமாக இருக்கும்
முகவர்நண்பர்கள்,
நம்பிக்கையுடன் விசுவாசத்தை
தொடரும் பாலிசிதாரர்கள்,
அனைவருக்கும் வாழ்த்துகள்.
LIC
இதயங்களால்
எழுந்த கட்டடம்!
வாழ்க LIC
வளர்க LIC
Thanks to Vsubramanian viswanathan
No comments:
Post a Comment